Tuesday, November 18, 2008

0.0=> தனிமையின் நாள் இன்று ~~


தனிமை இருளில் தவிக்கின்ற இதயம்..

வெளிச்சம் தேடி ஓடும் பாதையில்..

நண்பர்கள் தீப்பந்தங்களாய்..

தவிர்த்து ஓடினேன், அவர்கள் அருமை மறந்து..

பெண்களின் நட்பு மின்மினிப் பூச்சியாய்..

சொந்தமில்லா ஒன்று, அறிந்தே நாடினேன்..

இன்று போகும் திசை தெரியாமல்,

நிற்கும் இடம் புரியாமல்,

ஏந்த மறந்த தீப்பந்தங்கள் மனதை சுட்டன,
மறைந்த மின்மினிகள் என்னை இருளில் விட்டன,

தட்டுத் தடுமாறி தேடிப் பார்க்கிறேன்..

வாழ்க்கை பயணத்தில் இன்று,

பாதை மாறி நின்று பேதலிக்கிறேன்..


விரைவினில் மாற்றி அமைக்கிறேன்..

Friday, November 14, 2008

0.0.=> வாழ்க்கை உந்தன் கையில் ~~


மனிதனின் குணம் மனது நிறைய ஆசை..

வாழ்க்கையின் நிஜம் உழைப்புக்கேற்ற ஊதியம்..

ஆசையை அடைய போராட்டம்..

தேசங்கள் கடந்து உழைத்திட்டோம்..

ஆயினும் ஆசைகள் தீரவில்லை..

எனென்றால் கடவுளுக்கு என்னை பிடிக்கவில்லை..

(அழுகின்றான் அடிமனதில் ஒரு மனிதம்..)

வாழ்க்கையின் முடிவென்று ஒன்றே உண்டு..

உன் மரணம் வந்தால் நீ காண்பாய் அன்று..

நீ இருக்கும் வாழ்க்கை நேரம் தன்னில்,

உள்ள நோக்கம் இறுதியில் மகிழ்ச்சி ஒன்றே..

துன்பம் உன் அழுகைகில்லை..

இன்பம் உன் சிரிப்புக்கில்லை..

இரண்டும் உந்தன் வாழ்வின் வழி..

உன் இன்பன் இவ்விரண்டுக்கும் பொதுவினில் வந்தால்..

வாழ்க்கை உந்தன் கையில் வரும்.