Wednesday, May 7, 2008

~~~~~வாழ்கையில் வர்ணங்கள்~~~~~

வாழ்கை பயணத்தில் செல்லும் பாதை எல்லாம்
வர்ணங்கள் பூசி அழங்கரிக்க ஆசை கொண்டேன்..



தொடும் தூரம் பயணத்தில் நின்று திரும்பிப் பார்த்தேன்,

அன்று தொட்டு வடித்த வர்ணங்களைவிட
விட்டு வந்த இடங்கள் கவலையை தந்தது..

விடுத்த இடங்களை நிறைத்து வடித்து முழுமை தர
காலம் திரும்பவில்லை ..

இனி எடுக்கும் வழியில் முழுதாய் பூசிட
முயன்று பார்த்தேன் முடியவில்லை..

என் சக்திக்கு மீறியது கிடைக்கவும் இல்லை,
கிடைத்த பலத்தை நான் வெறுக்கவும் இல்லை..

இன்று புரிந்துகொண்டேன்
"போராடாமல் வாழ்வது வாழ்க்கையும் இல்லை"
..

இந்த தொலை தூரப் பயணத்தின் நடுவில்
இன்று திரும்பிப் பார்கிறேன்,

நான் விட்டு வந்த இடங்கள் இல்லை
தொட்டு வடித்த வர்ணங்கள் மனதை வென்றன..

பல்லங்களில் விழுந்து நான் கட்டிய படிக்கட்டுகள்..
உயரங்களில் பலர் எனக்காக வடித்த சறுக்கல்கள்..

வலிகளுக்கும் வழிகளுக்கும் பொதுவாய் அமைந்த என் உயிர் நணபரகள..

இதில் எனக்காகவே தொடர்ந்து வந்த என் ன்ன..

இதற்க்கெல்லாம் பதில் சொல்ல விளையும் என் மனதை,
இரு கண்ணீர் துளிகள் விழுந்து சொல்லும் வார்த்தைகளில் மறைத்தேன்..

இன்றும் வாழ்கிறேன் வர்ணங்கள் கையிலேந்தி..

No comments:

Post a Comment

Have Pride in How Far U have come and Have Faith in How Far U can go ! ! !